Monday, October 6, 2008

லக்கி லுக் மற்றும் தாமிராவுக்கு!

பிரச்சனை இங்க ஆரம்பிக்குது,
இதப்படிங்க!

எழுத்துலக சூப்பர் ஸ்டாருக்கு ஒரு கடிதம்! - லக்கி லுக்!
ஞாநிக்கு என் பதில்- தாமிரா!

நான் நினைக்கிறேன் நீங்கெல்லாம் (அதாவது பதிவெழுதும் நண்பர்கள்) இந்த ஞாநி, ஜெயமோகன், சாரு நிவேதிதா மாதிரியானவங்கள ரொம்ப பெரிய ஆளா நினைக்கிறீங்க.... நீங்கல்லாம் உங்கள எழுத்தாளன்னு சொல்லிக்கிறதில்லஅதனால உங்களு
க்கு ஈகோவும் இல்ல ஆனா இந்த எழுத்தாளன்னு சொல்லிகிட்டு திரியிராங்களே அவங்களுக்கு தான் எவ்வளவு திமிர்!
அப்படிஎன்ன இவங்கெல்லாம் இந்த சமூகத்துக்கு செஞ்சு கிழிச்சுட்டாங்க.. இவங்கள எதுக்கு மதிக்கனும்? இல்ல இவங்க எழுத்தால சமூகத்துல மாற்றமோ விழிப்புனர்வோ வந்திருச்சா...ஒரு மண்ணும் கிடையாது.

சாரு நிவேதிதா சரோஜா தேவி எழுதறார், ஞாநி அ.தி.மு.க.வுக்கு விலைபோயாச்சு, ஜெயமோகன் அம்பானிக்கு வக்காளத்து வாங்கறார்.
இந்த ஆளுங்கெல்லாம் எழுத்து வியாபாரிங்க, அந்த அளவுக்கு இவங்கள மதிச்சா போதும்.

படிக்க
என்ன கொடுமை ஞாநி இது? - லக்கி லுக்!
சாரு நிவேதிதாவும் சரோஜா தேவியும் - கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்
நவ்வாப்பழம்: ஜெயமோகனுடன் ஒரு தத்துவவிசாரம்! - வினவு, வினை செய்!

உண்மையான எழுத்தாளன்னா அவன ஊர் கொண்டாடனும்...மரியாத தானா கிடைக்குனும்... இந்த படங்கள பாருங்க






இது கவிஞர் 'முகம்மது டார்விஷ்'ன் இறுதி ஊர்வலம்.
தனது வீட்டு இழவு மாதிரி மக்கள்அழுவுராங்களே, டார்விஷ் இத கேட்டா வாங்குனாரு?
இதுல அத்தன பேரும் அவரு கவிதைய படிச்சிருபாங்களா? நிச்சயமா இல்ல, இருந்தாலும் நம்ம விடுதலைக்காக பாடிய கவிஞன், நம்ம உரிமைக்காக எழுதிய எழுத்தாளன்னு , நம்மள்ள ஒருத்தன்னு ஜனங்க மதிக்கிறாங்க அதனால அழுவுராங்க..

இங்கேயும் இருக்காங்களே எழுத்தாளராம்...கவிஞராம்.... இவங்கள சாட்ல கூப்புட கூடாதாம், கழன்டுக்கிட்டார்னு சொல்லக்கூடாதாம். உடனே பத்திக்குமாம்...டென்சன் ஆவாங்களாம் பதில் எழுதுவாங்களாம்...நான்சென்ஸ்! இவங்க முதுகு சொறிய பத்து பேரு, இவங்க முதுக சொறியிற பத்து பேரு அவங்கள உட்டா இவங்கள சீண்ட நாதியில்ல. தமிழ் நாட்ல எத்தன பேருக்கு இவங்கள தெறியும் விடுங்க இவங்க குடியிருக்குற ஏரியாவுல எல்லாருக்கும் இவங்கள தெறியுமா?

நீங்கள்லாம் வருத்தம் தெறிவிச்சு பதில் போட்டு இவங்கள சமாதானப் படுத்தவும் தேவையில்ல நாய குளிப்பாட்டி நடு வீட்ல வக்கவும் தேவையில்ல!